Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லையென - கஜேந்திரகுமார்

இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறும் விடயத்தில் முன்னேற்றமாக எதையும் செய்யவில்லையென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே தமது அறிக்கையில் கூறி மாற்று நட வடிக்கைகள் பற்றியும் தெரிவித்து ள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு இலங்கை அரசாங்கம் தீர்மா னத்தை நடை முறைப்படுத்த உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென  கேட்பதன் ஊடாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பது தெளிவாகி றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவரித்துள்ளார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நேரடியாக தமது குரலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இதற்காக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஒழுங்கமைத்துள்ள கையெழுத்து போராட்ட த்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கையொப்பமிடவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் குறித்து இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவி க்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை சுட்டிக்காட்டப்பட்டு 2 மாற்று வழிகளாக போர்க்குற்றங்களை புரிந்த வர்கள் என அறியப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது விசேட குற்றவி யல் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து அதற்கு கொண்டு செல்ல வேண்டுமென  தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த 24 ஆம் திகதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 30:1 தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறை ப்படுத்த ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே கூறியுள்ளார் இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருடகால அவகாசத்தில் ஒரு வருட நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை ஆகவே மாற்று வழிகளை பார்க்கு மாறும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளருடைய கருத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர 30:1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கக் கூடாது. ஆகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக இல்லை. 

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஐ.நா வரை செல்லவேண்டும். அத ற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்துள்ளது. இப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணை ந்து கையெழுத்துக்களை இடவேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.