இலங்கை குறித்து ஜெனிவாவில் 14 உப குழுக்கூட்டங்கள் - மார்ச் 02.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14 உபக்குழுக்கூட்டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளன.
இக் கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கல ந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
அந்தவகையில் எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை தென்றல் அமைப்பு இலங்கை தொடர்பில் 11 ஆவது இலக்க அறையில் ஒரு உபக்குழுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோன்று ஏ.பி.சி. தமிழ் ஒலி என்ற அமைப்பு 21 ஆவது இலக்க அறையில் இலங்கை விவகாரம் தொடர்பில் விசேட உபக்குழுக்கூட்டத்தை நடத்தவுள்ளது.
அதேபோன்று 5ஆம் திகதி அச்சுறுத்தப்பட்ட மக்களின் அமைப்பு ஒரு உபக்குழுக்கூட்டத்தை நடத்தவுள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் 22 ஆம் இலக்க அறையில் இந்த உபக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் 7ஆம் திகதி பிரான்ஸின் ஒரு மனித உரிமை அமைப்பு 8ஆம் இலக்க அறையில் இலங்கை தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டத்தை நடத்தவுள்ளது.
8ஆம் திகதி மற்றுமொரு சர்வதேச அமைப்பினால் இலங்கையில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
27ஆம் இலக்க அறையில் இந்த உபக்குழுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. 9ஆம் திகதி லீபொன்ட் என்ற அமைப்பினால் இலங்கை தொடர்பில் மற்றுமொரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
8 ஆம் இலக்க அறையில் இந்த உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
12ஆம் திகதி பாரதி கலாசார அமைப்பினால் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. மனித உரிமை பேரவை வளாகத்தின் 23 ஆம் இலக்க அறையில் இந்த உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதேபோன்று 13 ஆம்திகதி தமிழ் உலகம் என்ற அமைப்பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. 7 ஆம் இலக்க அறை யில் நடத்தப்படவுள்ள இந்த உபக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கல ந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
மேலும் 14 ஆம்திகதி புத்துருவாக்க சமூக திட்ட முன்னணி என்ற அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பினால் இலங்கை விவகாரம் தொடர்பில் விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் விவகாரம் தொட ர்பிலேயே இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ள னர். 21 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மனித உரிமை விவகாரம் தொட ர்பில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டமும் 21ஆம் இலக்க அறையிலேயே நடத்தப்படவுள்ளது.
மேலும் மற்றுமொரு சர்வதேச அமைப்பினால் எதிர்வரும் 19 ஆம்திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இக்கூட்டமானது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க பசுமை தாயகம் அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான உபக்குழுக்கூட்டம் 20 ஆம்திகதி 25 ஆம் இலக்க அறையில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பாக இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதே தினத்தன்று சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பினால் இலங்கை தொடர்பான ஒரு விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
27 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அந்த வகையில் இந்த அனைத்து உபக்குழுக்கூட்டங்களிலும் இலங்கை தொட ர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. விசேடமாக இலங்கை மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்பட வுள்ளமை விசேட அம்சமாகும்.