Breaking News

யாழிலுள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்ற சிறுமி எங்கே ?... பதறும் பெற்றோர்!

முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட் டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிவநேசன் கஸ்தூரி என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ள நிலையில் கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் எதுவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்திருந்த நிலையில். முல்லைத்தீவு முள்ளியவளையில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாயார் சிறு வர் பாதுகாப்பு பிரிவினரிடம் தனது 15 வயது மகளை கண்டு பிடித்து தரும்படி இன்று கோரிக்கை விடுத்துள்ளாா்.