Breaking News

இராணுவத் தளபதியிடம் ஏ.கே 47 துப்பாக்கி வேண்டுமெனக் கோரிய சிறுவன்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளை யாட்டு விழா நேற்று (19) பிற்பகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடை பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக முள்ளிவாய்க்கால் மேற்கு 681 ஆவது படைப்பிரிவு இராணுவத் தளபதி கலந்து கொண்டார். அண்மையில் குறித்த முன்பள்ளி மாணவாகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கச் சென்ற குறித்த இராணுவத் தளபதி சிறுவர்களிடம் விளையாட்டு பொரு ட்கள் என்ன வேண்டுமென வினாவியுள்ளாா்.

இதற்கு 5 வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி ஒன்று எனக்கு தேவை எனப் பதிலளித்துள்ளார். இராணுவத்தினர் எதிர்பாராதவிதமாக குறித்த சிறுவ னின் பதில் அமைந்திருந்ததினால் அச் சிறுவனை அழைத்த இராணுவத் தள பதி மாற்றுப்பொருள் ஏதேனும் ஒன்றை கேட்கும்படி அன்பாக பணித்துள்ளார்.

இந் நிலையில் குறித்த சிறுவன் கெலிகொப்டர் ஒன்று தேவையெனத் தெரி வித்த நிலையில்  நேற்று முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி விளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி குறித்த சிறுவனை அழைத்து முச் சக்கர வண்டி விளையாட்டுப் பொருளினை சிறப்பு பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான (விளை யாட்டு) பொலிஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளதாக சந்திரன் முன் பள்ளி ஆசிரியர் தெரிவித்துள்ளார்.