சம்பந்தனுக்கும் ரணிலுக்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடுமில்லை – பொன்சேகா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடு எட்டப்படவில்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரதமர் வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டுமென நேற்று நடை பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், அமைச்சரிடம் ஊடகவியாலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்சேகா, எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. அனைத்து கல ந்துரையாடல்களிலும் தான் பங்கேற்றிருந்தாக தெரிவித்துள்ளார்.