Breaking News

மனித எலும்புக்கூடுகளை அகழும் சம்பவம் நீடிப்பு - மன்னாா்.!

மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த 'லங்கா சதொச' விற் பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் 3 ஆவது நாளாகவும் இன்றும் நீடிக்கப்பட்டுள்ளது.

'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட் கிழமை முதல் மன்னார் நீதி வான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலை யில் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பமா கின.

இதன் போது இன்று காலை லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு நடவடிக்கை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அகழ்வு பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் ஊடக வியலாளர்கள் புகைப்படம் எடுத்தல், மற்றும் வீடியோ பதிவு செய்வதற்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அகழ்வு பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட போது ஊடகவியலாளர்களுக்கு புகைபடங்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உரிய தடைய பொருட்கள் மற்றும் மீட்கப் பட்ட மனித எலும்புகள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று காலை 7 மணி யளவில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழு வினர், விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண் டிருந்தனர். 

தொடர்ந்தும் இரு இடங்களிலும் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. குறித்த அகழ்வுகளின் போது மனித எலும்புத்துண்டுகள், பற்கள் என மனித எச்சங்கள் அதிகளவில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.