Breaking News

உலகே எதிர்த்தாலும் தண்டனை தான் முடிவு - மஹிந்த அமரவீர

ஐரோப்பிய ஒன்றியம் அல்ல முழு உலகமே எதிர்த்தாலும் மரண தண்ட னையை தீா்மானிப்போம். இவ் விடயத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவ தில்லை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாா்.

 மேலும் தெரிவிக்கையில், 

போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிப்பது தொடர் பான இலங்கை அரசாங்கத்தின் தீர்மா னத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் உள் ளிட்ட மேற்குலக நாடுகள் எதிர்த்துள் ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் மரண தண்டனையை அமுல்படுத்தினால் பொருளாதார தடைகளை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

போதைப்பொருள் பாவனையை அழிப்பதற்கு கடந்த காலங்களில் பாரிய முய ற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. இதன் ஒரு கட்டமாகவே இந்த மரண தண்டனை காணப்படுகின்றது. 

நீதித்துறையினால் குற்றவாளிகளாக கருதப்பட்டு மரண தண்டனை அனுப வித்து வரும் கைதிகளுக்கு மரண தண்டனையை வழங்குவது எவ்வித மனித உரிமை மீறல் செயற்பாடாகாது என்பதை மேற்குலக நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துகொள்ள வேண்டும். 

அத்துடன் எமது நாட்டில் முக்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு எதிராக மேற்குலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. 

அத்துடன் ஜனாதிபதியின் இத் தீர்மானத்துக்கு நாட்டு மக்களும், பெளத்த மதத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்கியுள்ளனர். ஆகவே அர சாங்கம் நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு அமைய செயற்பட வேண்டுமே தவிர சர்வசே நாடுகளின் விருப்பத்திற்கு அல்ல எனத் தெரிவித்துள்ளாா்.