Breaking News

சீ.வி இன் மனு செப்டம்பர் 5இல் விசாரணைக்கு எடுக்கப்படும் !!!

பா.டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

டெனிஸ்வரனின் அமைச்சு பதவியை பறிக்கும் முதலமைச்சரின் கட்ட ளையை ரத்துச் செய்து அவருக்கு மீண் டும் அப் பதவியை வழங்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

எனினும் இந்த உத்தரவுக்கு ஏற்ப தற்போது வடமாகாண அமைச்சர்கள் சபை யில் உள்ள எவரையும் பதவி நீக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என சுட்டிக் காட்டி வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அதற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

குறித்த மனு இன்று உயர் நீதிமன்றில் 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமி னால் பரிசீலிக்கப்பட்ட போது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி விசா ரணைக்கு உட்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.