Breaking News

விவாகாரத்து விவகாரம் : பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்த நபரால் விபரீதம்.! (காணொளி)

இந்தியா - புதுடெல்லியில் நேரடி ஒளிபரப்பின் போது பெண் வக்கீல் ஒருவரை மவுலானா இஜாஸ் அர்ஷாத் கஸ்மி என்பவர் தாக்கியதற்காக கைதாகி யுள்ளாா். 

ஸீ இந்துஸ்தான் தொலைக்காட்சி யில் நேரடி நிகழ்ச்சியாக செவ்வாய்க் கிழமையன்று மாலை விவாதம்  நடைபெற்று கொண்டு இருந்த போது நிழச்சியில் மவுலானா இஜாஸ் அர் ஷத் கஸ்மி என்பவர் பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்துள்ளாா். 

தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் மவுலானாவை கைது செய்தனர். மவுலானா அடிக்கடி தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் . முத்தலாக் விவகாரத்திற்காக எதிராக போரா டும் வக்கீல் பராஹ் பைஸை செவ்வாய்க்கிழமை மாலை ஒரு விவாதத் தின்போது தொலைக்காட்சி நேரலையில் தாக்கினார். 

முத்தலாக் குர்ஆனில் அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்து அல்ல என வக்கீல் பராஹ் பைஸ் வாதிட்டார். இது மவுலானாவுக்கு வக்கிலுக்கும் இடையே சண்டையை தூண்டி விட்டது. 

இதனால் ஆவேசம் அடைந்த மவுலானா பெண் வக்கீலை கன்னத்தில் அறைந் தார் என்பதே தொலைக்காட்சி நிர்வாகத்தின் முறைப்பாடு தற்போது இவ் வீடியோ காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் மவுலானாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.