ஜனாதிபதி மைத்திரிக்கு முந்திய பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த - மோடி.!
இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்தி அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து செல்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
நேபாளத்தின் காத்மண்டு நகரில் தொடரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ் டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு பயணமாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாட லில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஜனாதிபதியுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய பிரதமர் எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியின் பிறந்த தினத்திற்கும் தனது முன்கூட்டிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.
அத்துடன் நான்காவது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் அதன் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த இந்திய பிரதமர் பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்படும் எந்தவொரு பணியையும் உரியவாறு நிறைவேற்ற தான் ஆயத் தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
மிகுந்த அனுபவமுடைய அரசியல் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் பிம்ஸ்டெக் அமைப்பு பெரிதும் பலப்படுத்தப்படுமென நம்பிக்கை தெரிவித்த இந்திய பிரதமர் அதனூடாக பிம்ஸ்டெக் மாநாட்டின் நோக்கினையும் குறிக்கோளையும் அடைவதற்கான வாய்ப்பு கிடைக்குமெனத் தெரிவித்துள்ளாா்.