Breaking News

சிங்களக் குடியேற்றத்திற்கான ரவிகரனின் கோரிக்கை ஏகமனதாக நிறைவேற்றம்.!

வடமாகாணத்தில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டுவந்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டுள்ளது. 

வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத் தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலை மையில் நடைபெற்ற போதே மேற்படி பிரேரணையை ரவிகரன் சபையில் விவரித்துள்ளாா். 

பிரேரணையை முன்னிட்டு ரவிகரன் உரையாற்றுகையில், 
தமிழர் நிலங்களில் குறிப்பாக வட மாகாணத்தில் இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புகளையும் தற்போது முல்லைத்தீவு உட்பட ஏனைய நான்கு மாவட்டங்களிலும் நிகழ்த்தப்படும் சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புகளையும் தகுந்த வல்லு நர் குழாம் ஒன்றை நிறுவி அவர்களினூடாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாவணப்படுத்தல் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சிங்கள மய மாக்கல் தொடர்பான வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ ஆவணமாக இருத்தல் வேண்டும். 

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கும் இச்சமயத்தில் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இக்குடியேற்றங்களை உடன் நிறுத்தவேண்டுமென்ற எமது அழுத்தமான கருத் தினை அரசாங்கத்துக்கு உரிய வகையில் தெரியப்படுத்துதல். 

தற்போது முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சட்டத்திற்கு புறம் பான மாயபுர குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் முகமாக வடமாகாண சபையை சார்பாக்கும் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் குறித்த இட த்திற்கு வருகை தந்து தொடரும் சிங்கள மயமாக்கலை எதிர்த்து வலிமை யான கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் ஒருநாள் கவனயீர்ப்பை மேற் கொள்ள வேண்டுமென மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளாா். 

இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் தொடர்ச்சியாக அரசுடன் பேசி வருவதால் தீர்க்கதரிசனமான தீர்வு கிடைக்கலாமெனத் தெரிவித்துள்ளாா்.