கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு.!
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக் கப்பட்டோரின் உறவுகளால் முன்னெ டுக்கப்படும் இக் கவனயீர்ப்பு போராட் டத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து முன்னெடுக்கவுள்ளாா்கள்.
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஒரு வருடத்தை கட ந்து அவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து போராட் டம் நடாத்தி வருகின்றாா்கள்.
சர்வதேசம் நீதியை பெற்று தர வேண்டுமெனக் கோரி தமது போராட்டத்தை பல்வேறு விதத்தில் தொடர்கிறார்கள்.
அந்த வகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட திகதியை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 மணி க்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வுள்ளனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து சிறப்பிக் குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.