Breaking News

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லை என்கிறாா் - காலியில் சுமந்திரன்

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் அனைத்து பிரச்ச னைகளும் புதிய அரசியலமைப்பால் தீராது எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லை யேல் ஒரு பிரச்சனையையும் ஆய்வு செய்திட முடியாது. 

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கும் வகை யில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் அவசியமானது. 

சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்வதுடன் ஏனைய மக்களுக்காக மறுசீர மைப்பு மற்றும் நீதிக்காக முன்னிற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.