Breaking News

காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய இருவர் கடற்படையினரால் கைது.!

காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பகுதியில் நேற் றைய தினம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பய ணித்த படகை மறித்து சோதனையிட்ட போது படகில் இருந்து 28 கிலோ கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

படகில் இருந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும், மீட்கப்பட்ட கஞ்சா போதைப் பொருளையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன் னெடுத்துள்ளனா்.