Breaking News

மீண்டும் கைது செய்த எனது மகனை விடுதலை செய்யுங்கள் - தாயின் வேண்டுகை.!

இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு எம்மிடம் கையளிக்கப்பட்ட எனது மகனை மீள கைது செய்து எட்டு ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதாக அரசியல் கைதியின் தாயான சூரியகாந்தி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

 மேலும் தெரிவிக்கையில்,

எனது மகன் சூரியகாந்தி ஜெயச்சந்திரன் (வயது 42) இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து சுமார் ஒரு வருட கால மாக புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப் பட்டு 05.04.2010 அன்று எம்மிடம் கைய ளிக்கப்பட்டார்.

எம்மிடம் கையளிக்கப்பட்ட நாள் முதல் வீட்டுக்கு இராணுவத்தினர், புலனாய் வாளர்கள், வந்து விசாரணைகளை தொடந்து கொண்டிருந்ததனால் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்தோம்.

மகனுக்கு திருமண பேச்சுக்கள் முற்று பெற்று திருமண நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 25.09.2010 அன்று வீட்டுக்கு வந்து எனது பிள் ளையை கைதுசெய்து கொண்டு சென்றனர்.

இன்று வரை அவரை விடுதலை செய்யாது அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளனர். எனது பிள்ளைக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு வழக்கு முடிவடைந்துள்ளது.

மற்றைய வழக்கு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனது மகனை துரித நடவடிக்கை எடுத்து சிறிய காலம் புனர்வாழ்வு அளித்தேனும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனக்கு ஐந்து பிள்ளைகள். சிறையில் உள்ளவர் நான்காவது பிள்ளை. மற் றைய பிள்ளைகள் திருமணம் முடித்து வாழ்கின்றனர். சிறையில் உள்ளவர் விழுப்புண் அடைந்து நடக்க முடியாது உள்ளவர்.

அவருக்கு திருமணம் நிச்சயித்த பெண் கூட வேறு திருமணம் செய்யாது என் பிள்ளைக்காக காத்திருக்கிறார். எனவே எமது பிள்ளையை பொது மன்னிப்போ, சிறிய கால புனர்வாழ்வு அளித்தோ விடுவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள் கின்றேன்.

எமது பிள்ளைகளின் விடுதலைக்காக பல்கலை சமூகம், அரசியல் தலைமை கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்புங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளாா்.

குறித்த தாயின் மகனான சூரியகாந்தி ஜெயசந்திரன் அனுராதபுரத்தில் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 8 அரசியல் கைதிகளில் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.