Breaking News

கிளிநொச்சியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் ஆதிக்கம் மக்கள் தவிப்பு.!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்தவர்கள் அகற்ற முயன்றதால் அங்கு பதற்றமான தவிப்பு ஏற்பட்டுள்ளது. 

சாந்தபுரம் பகுதியில் கடந்த காலங்களில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் விவ சாயத்தினை மேற்கொண்ட பின்னர் கை விட்ட நிலத்தில் பொதுமக்கள் தற்காலிக கொட்டகைகளை அமைத்து வாழ்கின்ற னர். கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் அம் பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்த மகளீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தனியார் காணிகளை மீள்குடியேற் றத்தின் பின்னர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தங் களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

தற்போது குறித்த காணிகள் அவர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் சாந்த புரம் கிராமத்தைச் சேர்ந்த காணியற்ற வறிய மக்கள் குறித்த காணியில் கொட்டில்களை அமைத்து குடியிருக்க முற்பட்ட போது. இன்றைய தினம் மீண் டும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்துவர்கள் அக்காணிகளை பிடிக்க முற்பட்ட போது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பல வந்தமாக அகற்றியுள்ளனர் இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்க ளுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் வரவழைக்கப் பட்டுள்ளனா்.