Breaking News

ராஜபக்ஷ குடும்பம் கனவிலும் நினைக்க கூடாது - ஜே.வி.பி

மக்கள் விடுதலை முன்னணியின் துணையுடன் மீண்டும் ஆட்சிபீடம் ஏறிவிட லாமென ராஜபக்ஷ குடும்பம் கனவில் கூட நினைக்க கூடாதென தெரிவித்த ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, எந்தவொரு சந் தர்ப்பத்திலும் இடைக்கால அரசாங்கத்திற்கு துணை நிற்கப் போவதில்லையெ னத் தெரிவித்துள்ளாா். 

பொது எதிரணியின் தலைமைத்து வத்திற்காக பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடைக் கால அரசாங்கத்தை உருவாக்கி மஹிந்த ராஜ பக்ஷவை நெருக்கடிக் குள்ளாக்கி, கோத்பாய ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் முன்னிலைப் படுத்தி, பஷில் ராஜபக்ஷவை பொது ஜன பெரமுனவில் இருந்து முழுமையாக வெளியேற்றுவதே இடைக்கால அர சாங்கத்தினை உருவாக்க முயற்சிப்பவர்களின் அரசியல் இராஜதந்திரமெனத் தெரிவித்துள்ளாா்.

அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமாயின் பொதுஜன பெரமுனவுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் இணைய வேண்டுமென பொதுஜன பெரமுன தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் விரிவுபடுத்துகையிலே இவ்வாறு தெரி வித்துள்ளாா்.