Breaking News

ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவு கூரல்.!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது. 

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடக வியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட் டுள்ளாா்.

நிமலராஜனின் படுகொலையுடன் ஆரம்ப மான ஊடகப் படுகொலை 2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரை 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப் பணியாளர் களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது.

ஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிப் பீடமேறிய நல்லாட்சி அரசாங்கம் இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊட கப்பணியாளர்கள் தொடர்பில் நீதிக்குப் பதிலாக வெறும் மௌனத்தையே பதிலாக வழங்கி வருகின்றது.

தமிழோசை,அதன் சிங்கள சேவையான சந்தேசிய, ஐ.பி.சி தமிழ் உள்ளிட்ட வானொலிகள், நாளிதழ்கள், ராவய உள்ளிட்ட தமிழ் சிங்கள வார இதழ்களென தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

நிமலராஜன் படுகொலை தொடர்பிலான விசாரணை கடந்த 14 வருடங்களிற்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர் மயில் வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் இன்று யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 3.00 மணிக்கு படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபியிலும் தொடர்ந்து அமையத்திலும் நடைபெறவுள்ளது.