Breaking News

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல.!

இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணு வத்தின் பொறுப்பெனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசி யல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல எனத் தெரிவித்துள்ளாா்.

கடந்த 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றம் அரசியல்வாதிகளுக்கிடையே யான அரசியல் மாற்றமாகும். ஆகையி னால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல. இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணு வத்தின் பொறுப்பு.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டால் அதனை கட்டு ப்படுத்துவதற்கு பொலிஸாரும், பொலிஸ் விசேட படையினரும் நடவடிக்கை எடுப்பார்கள். எனினும் அவர்களால் அக் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இராணுவத்தின் உதவியை கோரினால் மாத்திரமே இலங்கை இராணுவம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.

இந் நிலையில் அவசர நிலைமை ஏற்பட்டால் கலவரங்களை கட்டுப்படுத்து வதற்கு ஆகக் குறைந்த அதிகாரத்தை இராணுவத்தினர் பயன்படுத்த வேண் டும். அதற்குரிய உபகரணங்களை படையினர் தம் வசம் வைத்திருக்க வேண்டு மென இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளாா்.