Breaking News

மனோ நேரடியாகச் சென்று ஜனாதிபதியிடம் தெரிவித்தது என்ன ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் இணைய முடியா தென தாம் ஜனாதிபதியிடமே நேரடியாக தெரிவித்துள்ளதாக தமிழ் முற் போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்ட ணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர் களுக்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணி யின் ஆறு (6) எம்.பி.க்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனா திபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவ ரது அரசாங்கத்தில் இணைய முடியாது நேரடியாக கூறி விட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.