Breaking News

சபாநாயகரின் அதிரடி? அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்கள் பறக்கின்றன.!

சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகர் அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் தற்பொழுது அவசர கடிதங்களினை அனுப்பி வருவதாக பாராளுமன்றின் முக்கியஸ்தர் ஒருவரூடாக தகவல் வலைய மைப்பில் வெளியாகியுள்ளது.

நாட்டில் எற்பட்டுள்ள ஆட்சிக் குழப் பத்தின் பின்னால் மிகப்பெரிய சதி ஒன்று இருப்பதாகவும் இது நீண்ட நாளாக திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அக் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சதியின் பிரதான சூத்திரதாரியாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவே விளங்குவதாகவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளதாக மேற்படி தக வலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை எதிர்க்கட்சி வரிசையிலுள்ள கட்சித் தலைவர்களை அழைத்து கலந்துரையாடுகின்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.