Breaking News

மஹிந்த கோட்டைக்குள் மோதல்; ஒருவர் பலி; நான்கு பொலிஸ் படுகாயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறப்பிடம் எனப்படும் ஹம்பந்தோட்டையில் நேற்றிரவு ஹம்பாந்தோட்டையின் கட்டுவான் பகுதி யிலேயே இப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த பகுதியில் ஆர்ப் பாட்டம் ஒன்று நடைபெற்றதுடன், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோ கம் மேற் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் நடைபெற்ற கைகலப்பில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிய வருவ தாவது,

சட்ட விரோத மதுபானம் உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குத லில் 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாரை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். அத்துடன் கிராம மக்களினால் பொலிஸார் மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

அத்துடன் பிரதேசத்தில் டயர் எரித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இச் சம்பவத்தில் 4 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் பாதுகாபபு நடவடிக்கையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதியில் கண்ணீர் புகை மேற்கொண்டு பொது மக்களை அவ்விடத்தில் இரு ந்து கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனா்.