Breaking News

இரவோடு இரவாக மைத்திரியின் அவசர உத்தரவு.!

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஏற்பட்டுள்ள அர சியல் நெருக்கடி நிலைமைகளைத் தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுகளில் அவ சரமாக ஈடுபட்டுள்ளதாக உள்மட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிர காரம் நாட்டில் ஒரு அரசாங்கம் இல் லாத நிலைமை தோன்றியுள்ளது. இத னையடுத்து தேசிய பாதுகாப்புச் சபை நேற்றிரவு அவசர அவசரமாக கூட்டப் பட்டுள்ளதுடன் என்ன செய்யப்பட வேண்டுமென்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரை நோக்கி அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான அறிக்கையினை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டுமென மைத்திரி பணித்திருந்ததுடன் அரசியல் நெருக்கடியானது நாட்டில் எந்த வொரு அமைதியின்மையையும் தோற்றுவித்து விடக்கூடாதெனத் தெரிவித் துள்ளாா்.