Breaking News

225 எம்.பீ க்கள் கையெழுத்து ஆனால் ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை: மைத்ரி (காணொளி)

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்பதை சிறிலங்கா அரச தலை வரான மைத்ரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

குறிப்பாக நாடாளுமன்றில் அங்கம் வகிக்கம் 225 உறுப்பினர்களும் கையெழுத் திட்டு கொடுத்தாலும் ரணிலை மாத்திரம் பிரத மராக நியமிக்கப் போவதில்லை என்ற தனது உறுதியான முடிவை டிசெம்பர்3 ஆம் திகதி இரவு சந்தித்த ஐக்கிய தேசிய முன்ன ணியின் தலைவர்களிடத்தில் மைத்ரி திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இதனால் மேன்முறையீட்டு நீதிமன்றம் மஹிந்த மற்றும் அவரது அமைச்ச ரவை பதவியில் இருக்க சடட் அனுமதி இல்லையெனக் கூறி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தும் ஒக்டோபர் 26 ஆம் திகதிஏற்படுத்தப்பட்ட அரசி யல் குழப்பத்திற்கு தீர்வு இப்போதைக்கு இல்லை என்பதுஉறுதியாகியுள்ளது.