Breaking News

மகிந்த கோத்தாவிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு - மிலிந்த ராஜபக்ச.!

மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங் களில் இனப்படுகொலை குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கோத்தபாய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரி வித்துள்ளார்.

மிலிந்த ராஜபக்ச தனது டுவிட்டரில்  பதிவு செய்துள்ளார். முன்னாள் ஜனா திபதி முன்னாள் பாதுகாப்பு செயலா ளரிற்கு எதிராக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புலம்பெயர் புலிகளின் சட்டத்தரணிகள் இனப்படு கொலை குற்றச்சாட்டினை நீதிமன் றத்தில் சுமத்தவுள்ளதாக  தெரிவித் துள்ளதுடன் சிவானி தியாகராஜா என்ற சட்டத்தரணியே இதற்கு தலைமை தாங்குகின்றார் என மிலிந்த ராஜபக்ச அறிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உட்பட யுத்தத்தின் இறுதி தரு ணங்களில் முப்படைகளின் தளபதிகளாக பணியாற்றியவர்களிற்கு எதிராக வும் இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப் படுவதாகத் தெரிவித்துள்ளார்..