Breaking News

அலரி மாளிகையிலிருந்து வெளியேறிய ரணில்.!

இலங்கையின் பிரதமராக, 5ஆவது முறையாகவும் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் பதவிப் பிரமாணம் பெற்று பதவியேற்ற சில மணித்தியாலங் களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளாா்.

 பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர், கொழு ம்பு 07 இல் அமைந்துள்ள விக்ரமசிங்க குடும்பத்திற்கு உரித்தான தமது வீட் டுக்குச் சென்றுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக தொடர்ந்து அலரி மாளிகையில் தங்கி யிருக்க தீர்மானித்ததுடன் கடந்த 51 நாட்களாக பிரதமர் ரணில் உள்ளிட்டவர் கள் அலரி மாளிகையிலேயே நிரந்தரமாக வசித்துள்ளனா்.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி முதல் கடந்த 26ம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு நாட்கள் மாத்திரமே ரணில் விக்ரமசிங்க அலரி மாளி கையில் இரவு வேளைகளில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.