Breaking News

ஐந்து பிள்ளைகளுடன் தற்கொலைக்கு ஆயத்தமாகும் கைது செய்யப்பட்ட அஜந்தனின் மனைவி!

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்துள்ளாா்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமை யில் இருந்த பொலிசார் இருவர் படு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி செல்வராணி அவரது ஐந்து பிள்ளை களுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா விற்கு முன்பாக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது கணவருக்கும் பொலீசார் படுகொலைக்கும் சம்பந்தமில்லையெனவும் அவ்வாறு தொடர்பு இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தண் டனை வழங்குமாறு தெரிவித்துள்ளாா்.

தங்களது ஐந்து பிள்ளைகளுடன் கடந்த 18 நாட்களாக உணவுக்கு வழியின்றி கஷ்டத்தில் உள்ளதாகவும் தனது கணவரை அரசாங்கம் விடுதலை செய்யா விட்டால் தான் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்திட ஆயத்தமாகவுள் ளதாகவும் தெரிவித்துள்ளாா்.