Breaking News

இலங்கை மீனவர்கள் மீது எங்களுக்கு குண்டு வீசத்தெரியாதா? சீமான் முழக்கம்.!

எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கிறார்கள், தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயன்படுத்துகிறார்கள் எனக் கூறி தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியவாறு உள்ளது.  இலங்கை கடற்படை. பட குகளை, மீனவர்களை சிறை பிடிப்பது முதல் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது வரை நீடிப்பது இலங்கை கடற்படையின் எதேச்சதிகார ஏற் பாடு.

அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நட த்துவதும், அத்தகைய நிகழ்வுகளை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக முதல் வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவ தும் வாடிக்கையாகி வரக்கூடிய சூழ லில், நேற்றைக்கு முன்தினம் கச் சத்தீவு அருகே மீன் பிடித்து கொண் டிருந்த தமிழக மீனவர்கள் மீது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் பெட் ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலின் காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி சாத னங்கள் சேதமடைந்துள்ளன. இலங்கை மீனவர்களின் பெட்ரோல் குண்டு தாக்குதலை தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டு கடற் படையும் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துள்ளது.

இலங்கை கடற்படையாலும், மீனவர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப் பட்ட செய்தி வெளியானது முதலே தமிழகம் கொதிப்படைந்துள்ள சூழலில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

"நம்முடைய மத்திய அரசிடமிருந்து அத்தனை உதவிகளையும் பெற்றுக் கொண்டு பொய் குற்றச்சாட்டுகளை கூறி நம்முடைய மீனவர்கள் மீதே இல ங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள கூடிய செயலே அல்ல. அவர்கள் வீசியதைப் போல எங்கள் மீனவர்களுக்கு கையெறி குண்டு களை வீசத்தெரியாதா?. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.