Breaking News

அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அரசாங்கம் சதித் திட்டம் - வாசுதேவ.!

அழுத்தங்களில் இருந்து தப்பித்திட தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும். என்றாலும் அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சதி முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாகவே ஜனவரி முதல் ஊடகங்களை கட்டுப்படுத்துவ தாக பிரதமர் தெரிவித்திருக்கின்றார் என ஜனநாயக இடதுசாரி முன்னணி யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாண யக்கார தெரிவித்துள்ளாா்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளாா்.

மேலும் தெரிவிக்கையில்…,

அரசாங்கம் தேர்தலுக்கு செல்லாமல் எப்படியாவது அதிகாரத்தை தக்க வைத் துக்கொள்ளவே முயற்சித்துள்ளது. மேலும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அண் மையில் மாவனெல்லையில் நடைபெற்ற சம்பவமும் அரசாங்கத்தின் சதித் திட்டமாகவும் அமையலாம்.

அத்துடன் ஊடகங்களை அடக்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனவரி யில் இருந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதுடன் எனவே அதிகா ரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டங் களை மறைக்கவே ஆரம்பமாக ஊடகங்களை அடக்க பிரதமர் முயற்சித்துள் ளாா்.