Breaking News

கோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்.!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜக்ஷ விசேட மேல் நீதி மன்றில் ஆஜராகியுள்ளார்.

மெதமுலனை டீ.ஏ.ராஜபக்ஷ அருங் காட்சியகம் நிர்மாணிப்பதற்கு 3 கோடி 39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி யமை தொடர்பில் முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோத்தாபய ராஜ பக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமாதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் இன்று முதல் தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பிரதான நியாய மேல் நீதிமன் றத்தில் சம்பா அபயக்கோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்ட போதே இன்றைய தினம் விசாரணைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை இன்றைய தினம் விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது.