Breaking News

நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் அதிரடி.!

உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கோரி உயர் நீதிமன்றில் வழக் குத் தாக்கல் தொடுக்கவுள்ளதாக வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதல மைச்சர் எஸ்.எம். ரஞ்சித் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பி ல் மேற்படி வழக்குத்தாக்கலை செய் யவுள்ளதாகவும் இதற்கான அனை த்து நடவடிக்கைகளும் முடிவடை ந்துள்ளதாகவும் அடுத்த வாரமளவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய் யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

நான்கு மாகாண சபைகளின் காலம் முடிவடைந்து இன்றுடன் ஒரு வருடமும் நான்கு மாதங்களும் நிறைவடைந்துள்ளன. அரசாங்கத்திற்கு தேர்தலை நடத் தும் நோக்கம் இல்லை.

நாட்டில் உள்ள பாரிய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் எண்ணம் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிடையாது. மாறாக புதிய அரசியலமைப்பை உருவாக் கும் பணிகளிலேயே அவர் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றாா் எனத் தெரி வித்துள்ளாா்.