Breaking News

திருகோணமலையில் கொடூரக் கொலை கணவன் மனைவி மீது கத்திக் குத்து.!

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை கணவன் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை  இன்று காலை திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவில் உள்ள வெலிங்டன் வீதியில் நடைபெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 28 வயதுடைய இர ண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரி ழந்துள்ளார். தனிப்பட்ட குடும்ப பிரச் சினைகள் காரணமாகவே இவ்வாறு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கழுத்திலும் வயிற்றிலும் கத்திக் குத் துக்கு இலக்கான மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனும திப்பதற்காக கொண்டுச் சென்ற போது உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான கணவன் 35 வயதுடைய அவரது கணவர் தலைமறைவாகி யுள்ளார். இவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடு பட்டுள்ளனா்.