Breaking News

இலங்கைக்காக புதிய பிரேரணை பிரதான நாடுகளுடன் பேச்சு - தமிழ் தேசிய கூட்டமைப்பு.!

ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றினை பிரதான நாடுகள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக அங்கம் வகிக் கும் பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள் ளாா். 

இலங்கையின் பொறுப்புக்கூறல் விட யத்தில் சர்வதேச மேற்பார்வை நீடிக் கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப் படவுள்ள நிலையில் இலங்கை குறி த்த விவகாரங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான உறுப்பினர் என்ற வகையில் சுமந்திரன் எம்.பியிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.