Breaking News

மஹிந்தவிற்கு காரசாரமான கருத்துக்ளை முன்வைத்த சம்பந்தன்.! (காணொளி)

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஒரு போலித்தேசப் பற்றாளர் என நேரடியாக குற்றம் சுமத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயன் சம்பந்தன், ஊழல் மோசடிகளை மறைத்துக் கொள்வதற்காகவே உத்தேச அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பை வெளியிடு வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை அதிகாரத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படும் மஹி ந்த ராஜபக்சவும், அவரது விசுவாசிக ளும் எவ்வாறு நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்கள் தொடர்பில் சிந்திக்கப் போகின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பிய சம்பந்தன், உத்தேச அரசியல் சாசன வரைபு தொடர்பில் அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்குகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.

நாட்டை மிக மோசமான வறுமைக்குள் தள்ளியுள்ள ஊழல் மோசடிகள் முடி வுக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால், கொழும்பில் குவிந்து கிடக்கும் அதி காரம் மாகாண மற்றும் பிரதேச மட்டங்களுக்கு பகிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய சம்பந்தன், இதற்காகவே உத்தேச அரசியல் சாசனம் கொண்டு வரப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்அரசியல் சாசன சபைக்கு முன்வைத்த அரசியல் சாசன வரைபு தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகள் குறித்து உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் கராசாரமான தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா்.

"இந்த நாட்டில் தாங்களே தேசப்பற்றாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் இருக்கின்றனர்.நான் அவர்களை தேசப்பற்றாளர்களாக கருதவில்லை. அவ்வா றான சிலர் இந்த அவைக்குள்ளும்இருக்கின்றனர்.

சில அறிக்கைகளையும் அவர்கள் வெளியிட்டனர். அவர்கள் தேசப்பற்றாளர் அல்லர். இவர்கள் சந்தர்ப்பவாதிகள். போலியான தேசப்பற்றாளர்கள். பேரின வாதிகள். தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு முயலும் அதிகார வெறியர்கள்.

அதேவேளை இவ்வாறான சந்தர்ப்பவாத தேசப்பற்றுக்கும் – ஊழல் மோசடிக் கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண் டும். போலியான தேசப்பற்றை, ஊழல் மோசடிகளை மூடி மறைத்துக் கொள்வதற்கான கவசமாக இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதிகாரம் மீது மோகம்கொண்டுள்ளவர்கள், மிகவும்மோசமான ஊழல்வாதிக ளாகவே இருக்கின்றனர். இதனாலேயே இந்த மோசடிக்காரர்களின் நடவடிக் கைகளால் நாடு இன்று மிக மோசமான வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பவாத, போலியான தேசப்பற்றாளர்கள் எவ்வாறு நாட்டிற் காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் சிந்திக்கப் போகின்றார்கள். இவர் கள் தேசப்பற்றை ஊழல் மோசடிகளை மூடிமறைக்க கவசமாக பயன்படுத்தும் வரை ஒருபோதும் நாடு குறித்து சிந்திக்கப்போவதில்லை.

இதுவும் ஒருகாரணம் அதிகாரத்தை பரவலாக்கம் செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துவதற்கு” என்றார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரன துங்கவின் ஆட்சியின்போதும்,

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் நாட்டின் தேசியப் பிரச்சனையாக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண அதிகாரப் பரலாக்களை மையப்படுத்திய பிரேரணைகளுக்கு தனது முழுமை யான ஆதரவை வழங்கி யிருந்த மஹிந்த ராஜபக்ச, தனது அரசியலுக்காகவே உத்தேச அரசியல் சாசன வரைபிற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ச அரசியல் தீர்வை முன்வைப்பதாக வாக்குறுதி அளித்தே தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளிடம் உதவி களை பெற்றுக்கொண்டிருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அரசியல் தீர்வைக் காண அர்ப்ப ணிப்புடன் செயற்படுவதாகநீங்கள் ஐ.நா ஊடாக சர்வதேச சமூகத்திற்கு வாக் குறுதிகளை அளித்தீர்கள்.

அதேபோல் எமதுஅயல் நாடான இந்தியா உட்பட அனைத்து நேச நாடுகளுக் கும் வாக்குறுதி வழங்கியிருந்தீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதற்காக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு இந்த வாக்குறுதிகளை வழங்கினீர்கள்.

அரசியல் தீர்வைக் காண நடவடிக்கை எடுப்பதாகவாக்குறுதி அளித்தீர்கள். அர சியல் தீர்வை வழங்குவதாக நீங்கள் வழங்கியவாக்குறுதிக்காக தமிழீழ விடு தலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியா உங்களுக்கு உதவியது.

அமெரிக்கா உதவியது. ஐரோப்பிய நாடுகள் உங்களுக்கு உதவின. அதற் கமையவே நீங்கள் நான் முன்னர் குறிப்பிட்ட யோசனைகளை முன்வைக்க நடவடிக்கைஎடுத்திருந்தீர்கள்.

இதுதான் வரலாறு. இவற்றை புறந்தள்ளி விட்டு முன்னோக்கி நகரமுடியாது. ஆனால் இன்று நீங்கள் தேர்தலில் இது குறித்து கதைக்கலாம் என்று கூறுகின்றீர்கள்” என்றார் சம்பந்தன்.

உத்தேச அரசியல் சாசன வரைபை கைவிடுமாறு இன்றைய தினம் அரசியல் சாசன சபையில் வலியுறுத்தியிருந்த மஹிந்த ராஜபக்ச, பொதுத் தேர்தலை நடத்தினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமது தரப்பு யோசனைகளை முன்வைப்பதாக தெரிவித்துள்ளாா்.

மஹிந்தவின் இந்த யோசனையை நிராகரித்த சம்பந்தன், புதியஅரசியல் சாசனத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு பொதுத் தேர்தலொன்றை நடத்தி வேண்டியஅவசியமில்லையெனத் தெரிவித்துள்ளாா்.

அது மாத்திரமன்றி ஜனாதிபதி மைதிரியுடன்இணைந்து ஆட்சியைக் கவிழ்த்து முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்த மேற்கொண்ட சதி உச்சநீதிமன்றினால் தோற்கடிக்கப்பட்டது நினைவில் இல்லையா என்றும் மஹிந்தவை பார்த்து சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

"கெரளவ மஹிந்த ராஜபக்ச உள்ளுராட்சி சபைத்தேர்தல் தொடர்பில் கதைத் தார். நான் ஐக்கியதேசியக் கட்சிக்காக பேசவும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் இல்லை.2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடை பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தைகைப் பற்றியது.

அவர்க்ள அதிக ஆசனங்களை கைப்பற்றினர். இதற்கமைய குறிப்பிட்ட காலப் பகுதிக்கு ஆட்சியை கொண்டு நடத்த அவர்களுக்கு அனுமதி உள்ளது.

ஆனால் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற காரணத்திற்காக உங் களால் ஆட்சி அதிகாரத்தைமாற்றக்கூடிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா?.

அதேவேளை புதிய அரசியல் சாசன வரைபு நடைமுறைப்படுத்தப்பட வேண்டு மானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறை வேற்றப்பட வேண்டும்.

அதன் பின்னரே மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கு எமக்குபொதுத் தேர்தல் அவசியமில்லை. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின்ஆதரவுடன் புதிய அரசியல் சாசன வரைபை நிறைவேற்றிக்கொள்வதற்கும் பொதுத் தேர்தலொன்று அவசியமில்லை.

சர்வஜன வாக்கெடபு்பு நடத்தப்படும் போது இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும், அதாவது சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் உட்பட இந்த நாட்டில் வாழும் அனைவரும் வாக்களிப்பர்.

அப்போது அவர்கள் முடிவெடுப்பார்கள். அப்போது தீர்மானிக்கப்படும்இந்த நாட்டின் மீயயர் சட்டமான புதிய அரசியல் சாசனம் வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பர். அதற்காக உடனடி பொதுத் தேர்தல் அவசிய மில்லை.

தேர்தல் நடைபெறவேண்டிய காலத்தில் அதனை நடத்த முடியும். அதனை விடுத்து நீங்கள் எவ்வாறு பொதுத்தேர்தலை இப்போது கேட்க முடியும். நாட் டில் சட்டமொன்று உள்ளது.

ஏற்கனவே நீங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினீர்கள். நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தீர்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த நடவ டிக்கைகளை முடக்கியது.

இத்தனைக்கும் காரணமாக நீங்களே இப்பொழுது மீண்டும் பொதுத் தேர்தல் வேண்டும் என்று கூறுவதுவேடிக்கையாக இருக்கின்றது” என்றார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்அரசியல் சாசன சபைக்கு முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து,

புதிய அரசியல் சாசனமொன்றை தயாரிக்க முழுமையான பங்களிப்பை வழ ங்க வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர், அனைத்து கட்சிக ளினது் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பகிரங்க கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளாா்.

“இந்தசபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் புதிய அரசியல் சாசன வரைபைதயாரிப்பதற்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண் டும் அது அவர்களது கடமை.

தமிழ்தேசியக் கூட்டமைப்பினரான இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிய லில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம், இந்த சபைக்குள் ஆளும் கட்சியாகவோ, எதிர்கட்சியாகவோ இருந்தாலும் இந்த சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், ஜாதிக்க ஹெல உறுமயவாக இருக்கலாம்.

ஜே.வி.பி யாகவும் இருக்கலாம். ஆனால் அனைத்து உறுப்பினர்களும் பொறு ப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட வேண்டியது அவசியம். அனைத்து விவகாரங்களும் கலந்துரையாடலுக்கு வரும் போது தமது கடப் பாட்டை உறுப்பினர்கள் நிறைவேற்ற வேண்டும்.

அதன் ஊடாக தயாரிக்கப்படும் அரசியல் சாசனத்தை இந்த சபைக்குள் நிறை வேற்றி, மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்பிற்குவிட முடியும்” என சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளாா்.