Breaking News

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 762 சிறைக்கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை யொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலைசெய்ய தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிகடை சிறைச்
சாலை விளையாட்டு மைதானத்தில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சா லையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில் 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50கைதிகள்,பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என்ற அடிப்படையில் சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறை தான் அதிகமான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.