Breaking News

நாளை ஆரம்பமாகின்றது யாழ். பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கை.!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நாளை வெள்ளிக் கிழமை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இன்று இணக்கம் தெரிவித்துள் ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண வர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோருக்கு எதி ராக முன்னெடுக்கப்படும் பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழான வழ க்குகளிலிருந்து அவர்களை முழுமை யாக விடுவிப்பதற்கான உயர் மட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதி காரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த இணக்கம் மாணவர் ஒன்றியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ஒரு மாத காலமாக கல்வி நடவடிக்கைகளை இடை நிறுத்தியி ருந்தன.

எனினும் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக் கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக பல் கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

எனினும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோருக்கு எதிராக முன் னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக் கணிக்கப் போவதாக மாணவர் ஒன்றியத்தினர் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனா்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மாணவர்கள் புறக்கணிப்பை முன்னெடுத்தனர். அதனையடுத்து மாணவர் ஒன் றிய உறுப்பினர்களை அழைத்து பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சு நடத்தியது.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண வர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளி லிருந்து அவர்களை முழுமையாக விடுவிப்பது தொடர்பில் உயர் மட்டத் தரப்புகளுக்கு எழுத்து மூலக் கோரிக்கைகளை உடனடியாக அனுப்பப்படும்.

அத்துடன், உயர்மட்டத் தரப்புக்களை நேரடியாக சந்தித்து மூவரது விடு தலையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தகுதிவாய்ந்த அதி காரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி, பல்கலைக்கழக மாணவர் ஒன் றியப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளாா்.

அவரது உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட மாணவர் ஒன்றியத்தினர், நாளை வெள்ளிக்கிழமை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பதாக தெரி வித்துள்ளனா்.