Breaking News

மாவனெல்ல புத்தர் சிலை­களை தகர்க்கும் செயல் சஹ்­ரானின் உத்­த­ரவில் நடைபெற்றதாக - சி.ஐ.டி.

மாவ­னெல்லை நகரை அண்­மித்த பகு ­தி­களில் ஒரே இரவில் நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, உயிர் த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாஷிமின் உத்­த­ர­வுக்கு அமை­யவே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. நேற்று மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று முற்­பகல் மாவ­னெல்லை நீதிவான் உப்புல் ராஜ­க­ருணா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே , குறித்த விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யான சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க இதனை நீதி­வா­னுக்கு தெரிவித்துள் ளாா்.

இதன்­போது இந்த சிலை உடைப்பு விவ­கா­ரத்தை பூர­ண­மாக நெறிப்­ப­டுத்­தி­யுள்ள சஹ்ரான், அதனை முன்­னெ­டுத்த சந்­தேக நபர்­க­ளுக்கு 'நீங்கள் போய் சிலை­களை உடைத்­து­விட்டு என்­னிடம் வாருங்கள்' என கூறி­யுள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யின் விசா­ரணை அதி­காரி நீதி­மன்றின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­துள்ளார்.

இச் சிலை உடைப்பு விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்த போது, நீதி­மன்றின் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஏற்­க­னவே விளக்­க­ம­றி­யலில் உள்ள 14 சந்­தேக நபர்கள் கடும் பாது­காப்­புக்கு மத்­தியின் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­டனர். இத­னை­விட சி.ஐ.டி.யின் பிடியில் இந்த விவ­காரம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 20 சந்­தேக நபர்­களும் நேற்று விஷேட பாது­காப்­புடன் அழைத்து வரப்­பட்டு நீதி­வானின் மேற்­பார்­வைக்­காக ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இந்த விவ­கா­ரத்தில் இது­வரை கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்கள் 34 ஆவர். இதன்­போது நீதி­மன்றின் பாது­காப்­புக்­காக மேல­தி­க­மாக இரா­ணுவம் வர­வ­ழைக்கப்­பட்­டி­ருந்­த­மையும் விஷேட அம்­ச­மாகும். சந்­தேக நபர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­திய பின்னர் விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க மேல­திக விசா­ரணை அறிக்­கையை முன்­வைத்து விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­தினார்.

அதன்­படி, புத்தர் சிலை­களை தகர்க்கும் இச் செயற்­பா­டுகள் பயங்­கர்வாதி சஹ்­ரானின் பூரண மேர்­பார்வை மற்றும் உத்­த­ரவின் கீழ் இடம்­பெற்­றுள்­ள­தாக சி.ஐ.டி. அதி­காரி நீதி­மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­துடன் இந்த விவ­கா­ரத்தில் கைதாகி விளக்­க­ம­றி­யலில் உள்ள இப்­ராஹீம் மெள­லவி என்­ப­வ­ரது வீட்டில் இந்த சிலை உடைப்­புக்­கான வகுப்­புக்கள் சஹ்­ரா­னினால் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், வகுப்பின் முடிவில் சிலை­களை உடைத்­து­விட்டு நீங்கள் மீண்டும் என்­னிடம் வாருங்கள் என சஹ்ரான் அங்­கி­ருந்த தனது சகாக்­க­ளுக்கு கூறி­யுள்­ள­தா­கவும் சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்த அதி­காரி நீதி­மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­விட சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்கள் சிலர் சில நாட்­களில் கைதான நிலையில் அந்த சந்­தேக நபர்­களை பிணையில் விடு­வித்­துக்­கொள்ள சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு வழங்­கு­கு­மாறு கூறி சஹ்ரான் 20 இலட்சம் ரூபா பணத்தை இப்­ராஹீம் மெள­லவி எனும் சந்­தேக நப­ருக்கு கொடுத்­துள்­ளமை தொடர்­பிலும் விசா­ர­ணை­களில் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அது குறி த்து மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அந்த அதி­காரி நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

விளக்­க­ம­றி­யலில் உள்ள சந்­தேக நபர்கள் 14 பேரையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை மீள விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்ட நீதிவான் உப்புல் ராஜ­க­ருணா, தடுப்புக் காவலில் உள்ள சந்­தேக நபர்கள் 20 பேரையும் மீள நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசா­ரிக்­கவும், எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 12 ஆம் திகதி அவர்­களை மேற்­பார்­வைக்­காக மீள நீதி­மன்ரில் ஆஜர் செய்­யவும் சி.ஐ.டி.க்கு உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் இந்த விவ­கார விசா­ர­ணை­களின் போது கைப்­பற்­றப்­பட்ட வெடி­பொ­ருட்­களை அழிக்க, கேகாலை அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­ப­திக்கும் இதன்­போது நீதி­மன்றம் உத்­தர்­வொன்­றினை பிறப்­பித்­தது. கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­ணாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய கோண­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன.

இச் சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்டி நுவர - வெலம்­பட பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னது. அத்­துடன் அந்த மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை சேதப்­ப­டுத்­தப்­படும் அதே நேரம் அதனை அண்­டிய பகு­தியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேத­பப்­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதே தினம் அதி­காலை 4.00 ணிய­ளவில் மாவ­னெல்லை - திது­ரு­வத்த சந்­தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேத­பப்­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது தான் இந்த சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் அல்­லது இந்த அறு­வ­றுக்­கத்­தக்க சம்­ப­வங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க தடமும் கிடைத்­தி­ருந்­தது.

இக்­கா­லப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பகுதிகளில் நான்கு இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அவை இரு பீ அறிக்கைகள் ஊடாக் அனீதிமன் றுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. மாவனெலெலை - திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர்.

இவ்வாறு வந்ததாக கூறபப்டும் இருவரில் ஒருவரை பிரதேச வாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது முதல் இது குரித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற் போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளியாகியுள் ளன.