Breaking News

இலங்கை, முஸ்லிம் சமூகத்திற்கான எதிர்ப்பை வரவேற்கும் சபாநாயகர்.!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து வெளிக்காட்டப்படும் எதிர்ப்பை வரவேற்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொருவரும் முத லில் தங்களை இலங்கையர் என்றே அடையாளப்படுத்த வேண்டும். அவ் வாறு எவராவது சிந்திக்கவில்லை என்றால், அவர்கள் தீர்வின் ஒரு அங் கமல்ல, மாறாக பிரச்சினையின் ஒரு அங்கமே என்றும் அவர் தனது டுவிட் டர் பதிவிட்டுள்ளார்.

அரசியல் ஐக்கியத்தின் மூலமாகவே பாதுகாப்பு, பொருளாதாரம், நல்லிணக் கம் ஆகியவற்றுக்கு ஏற்படுகின்ற சவால்களை வெற்றிகொள்ள முடியும். நிறைவேற்று அதிகாரமும் பாராளுமன்றமும் ஒன்றுக்கு மற்றது உதவியாக இருந்து செயற்படவேண்டியதே தற்போதைய தருணத்தில் அவசியத் தேவை யாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.