Breaking News

இந்திய பிரதமரை நலம் நாடிய பாகிஸ்தான் பிரதமர்.!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உலக நாட்டு தலை வர்கள், உச்சி மாநாட்டின் போது ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரே இடத்தில் இருந்தனர். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்ட தோடு, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக மோடி க்கு இம்ரான் கான் வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாங்காய் மாநாட்டின் போது, மோடியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகின்ற இந்நிலையில்,பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என இந் தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனா்.