Breaking News

30 வருட யுத்தம் நடத்திய நாம் இன்று நண்பர்கள் - மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க

உங்­க­ளோடு 30 வரு­ட­மாக யுத்தம் செய்­தி­ருக்­கிறோம். உங்­களைப் புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காகப் பொறுப்­பேற்­றதன் பின்னர் உங்­க­ளிடம் நீங்கள் எங்கு இருந்­தீர்கள், எப்­பி­ர­தே­சத்தில் நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று நாங்கள் கேட்­ட­தில்லை. நீங்கள் யார் என்­ப­த­னை­யெல்லாம் மறந்­து­விட்டு நண்­பர்­க­ளாக, சகோ­த­ரர்­க­ளா­கவே பழ­கினோம் என்று மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க தெரி­வித்துள்ளாா். 

திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்­ப­கு­மார தலை­மையில் மாவட்ட செய­லக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளி­களின் குடும்­பங்­க­ளுக்கு தொழில், வாழ்­வா­தார உப­க­ர­ணங்கள் வழங்கும் நிகழ்வில் உரை­யாற்றும்போதே அர­சாங்க அதிபர் இவ்­வாறு தெரி­வித்துள்ளாா்.

தொடர்ந்து உரை­யாற்­றுகையில்...,

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வு­பெற்று நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக ஆயத்­தப்­பட்டோம். யாழ்ப்­பா­ணத்தில் துரை­யப்பா கொல்­லப்­பட்­டதிலிருந்து தொடங்­கிய யுத்தம் 30 வரு­டங்கள் நடை­பெற்­றது.

இந்த பத்து வரு­டத்தில் நாங்கள் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டுள் ளோம். அந்­த­வ­கையில் இங்­கி­ருப்­ப­வர்­க­ளோடு நேருக்கு நேராக சண்­டை­யிட்­டி­ருக்­கிறேன். உங்­க­ளோடு 30 வரு­ட­மாக யுத்தம் செய்­தி­ருக்­கிறோம். உங்­களைப் புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காகப் பொறுப்­பேற்­றதன் பின்னர் உங்­க­ளிடம் நீங்கள் எங்கு இருந்­தீர்கள், எப்­பி­ர­தே­சத்தில் நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று நாங்கள் கேட்­ட­தில்லை.

நீங்கள் யார் என்­ப­த­னை­யெல்லாம் மறந்­து­விட்டு நண்­பர்­க­ளாக, சகோ­த­ரர்­க­ளா­கவே பழ­கினோம். நாட்டில் ஜே.வி.பி. யினு­டைய பிரச்­சினை இருந்த காலத் தில் அவர்­க­ளோடு சண்­டை­யிட்­டி­ருக்­கிறோம். பிடித்தோம், அழித்தோம். அதன்­பின்னர் நாட்­டுக்­காக அவர்­களைச் செயற்­ப­டுத்­தினோம்.

அவர்­க­ளோடு நன்­றா­கவே பழ­கு­கின்றோம். நாட்டின் சமா­தா­னத்­துக்­கா­கவே முப்­ப­டை­யி­னரும் பாடு­பட்டோம். அதற்­கா­கவே எல்­லோரும் உழைத்­தார்கள். தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் இணைந்து வாழக்­கூ­டிய மாவட்­ட­மாக திரு­கோ­ண­மலை மாவட்டம் இருக்­கி­றது. யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் புனர்­வாழ்­வ­ளிப்பின் பின்னர் பல்­வேறு உத­வி­களை எமது பணி­ய­கத்தின் ஊடாக மேற்­கொண்டு வரு­கிறோம்.

சிறு­வ­யதில் யுத்­தத்­திற்குச் சென்­ற­போது, பெற்­றோரை, தாய், தந்­தை­யரை இழந்­தீர்கள், கல்­வியை இழந்­தீர்கள், இப்­போது படிப்பு இல்­லாமல் போயி­ருக்­கி­றது, வீடு வாசல் இல்­லாமல் போயி­ருக்­கி­றது. அவற்­றை­யெல்லாம் மீண்டும் ஏற்­ப­டுத்தித் தரு­வ­தற்­காக ஆயத்­த­மா­கி­யி­ருக்­கிறோம்.

யுத்தம் முடிந்து பத்து வரு­டங்­க­ளா­கி­விட்­டன. நாம் எல்­லோரும் இந்­தப்­பி­ர­தே­சத்தை எவ்­வாறு அபி­வி­ருத்தி செய்­வது என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும். நாங்கள் முன்னர் எப்­ப­டி­யி­ருந்தோம், பின்னர் என்ன நடந்­தது. இனி­வரும் காலத்தில் என்ன தேவை என்­பது பற்றி நாம் எல்­லோரும் மன ஒரு­மைப்­பாட்­டுடன் செயற்­பட வேண்டும்.

2014 -17ஆம் ஆண்­டு­களில் 10 மில்­லி­யனுக்கும் அதி­க­மான பல்­வேறு உத­வி­களைச் செய்­தி­ருக்­கிறோம். திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள 550 புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட குடும்­பங்­களும் பயன்­பெறும் வகையில் 16 லட்சம் ரூபாவை இந்த வருடத்தில் செலவிட்டுள்ளோம்.

அத்தோடு அரசாங்க அதிபரூடாகவும் 3 மில்லியன் ரூபா பெறுமதியான உத விகளை வழங்குவதற்காக கையளித்துள்ளோம். அதன் ஊடாகவும் பல்வேறு உதவிகள் வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்தும் உங்க ளது மேம்பாட்டுக்காக உதவிகளைப் புரிவதற்கு ஆயத்தமாகவுள்ளோம் என் றாா்.