Breaking News

"இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தால் 200 கோடி ரூபா சேமிப்பு"

ஜனாதிபதி தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும் ஒரே நாளில் நடத் துவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய பிரதானிகளான ஜனாதிபதி, பிரத மர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் உரிய கவனம் செலுத்துமாறு பெப்ரல் அமைப்பு எழுத்து மூல அறிக்கையை  விடுத்துள்ளது.

மாகாண சபை தேர்தலையும், ஜனா திபதி தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கான வழிமுறைகளை அரசாங்கத்தின் மூன்று பிரதானிக ளும் முன் னெடுக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தல் திருத்தில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு விரைவான தீர்வினை பெறுவது அவசி யமாகும். இரண்டு தேர்தல்களையும் நடத்த வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது.

மாகாண சபை தேர்தலையும், ஜனாதிபதி தேர்தலுடன் இணைத்து ஒரே நாளில் நடத்தினால் மக்களின் நிதியில் 200 கோடிசேமிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளாா்.

ஆறு மாத காலத்திற்குள் இரண்டு பிரதான தேர்தல்களை நடத்துவது சாதாரண விடயமல்ல இருப்பினும் நாட்டு மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து செயற்படுவது நாட்டின் அபிவிருத்தினை மேலும் வலுப்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.