Breaking News

அரசியல் கைதியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு நாமல்.!

தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சமரிமுத்து லோகநாத னின் குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வீடு ஒன் றினை வழங்கியுள்ளாா்.

குறித்த நிகழ்வு இன்று(30) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அரசி யல் கைதியான சபரிமுத்து லோக நாதனின் குடும்ப நிலையை சிறைச் சாலையில் வைத்து அறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ பக்ஷ, குறித்த குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்றை நிர்மானித்து இன்று (30) அவர்களிடம் கையளித்துள்ளாா்.

குறித்த அரசியல் கைதி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ பக்ஸ பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

அந்த வகையில் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழ கங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்ததோடு, கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு சென்று சந்தையின் நிலைமைகளையும் பார்வையிட்டுள் ளாா்.

மேலும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வருகின்ற சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் கைவிடப் பட்டு இருப்பதனை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.