Breaking News

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்று சிறப்பு விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தலை சகல பாட சாலை அதிபர்களுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலா ளர் எல்.இளங்கோவன் வழங்கியுள் ளார்.

இச் சிறப்பு விடுமுறைக்கான பதில் பாடசாலை நடத்தப்படவேண்டும். பதில் பாடசாலைக்கான நாளாக சனிக் கிழமை ஒன்றைத் தீர்மானித்து நடத்துவதற்கு சகல பாடசாலைகளின் அதி பர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.