Breaking News

பிரேஸில் சிறைச்சாலையில் மோதல்; 52 பேர் பலி.!

பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்களுக்கு இடையில் சுமார் 5 மணித்தியாலங்கள் மோதல் நடை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். இதன்போது, 16 கைதிக ளின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ள துடன், ஏனையோர் சிறைக்கூடங்க ளில் வைக்கப்பட்ட தீயில் சிக்கி உயி ரிழந்துள்ளனர்.

சிறைச்சாலைகளின் கட்டடங்கள், தீ வேகமாக பரவுவதற்கு ஏற்ற வகையில் காணப்படுவதால் தீ வேகமாக பரவியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

கைதிகளால் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த துடன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மோதல்களுக்கு காரணமான குழுக்களின் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களை பெடரல் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகில் அதிக கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேஸில் மூன் றாமிடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.