Breaking News

சிறையிலிருந்த பிள்ளையானை சந்தித்தார் மனோ

அமைச்­சரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணேசன் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­த­லைப்­பு­லிகள் கட்­சியின் தலை­வ­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தனை (பிள்­ளையான்) சந்­தித்துப் பேசி­யுள்ளார்.

 தனது அமைச்சின் நட­மாடும் சேவை மற்றும் மட்­டக்­க­ளப்பு திரு­கோ­ண­மலை மாவட்ட இந்து ஆல­யங்­க­ளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்­வுக்­காக மட்­டக்­க­ளப்­புக்கு சென்­றுள்ள அமைச்சர் நேற்றுக் காலை சிறைச்­சா­லைக்குச் சென்று பிள்­ளை­யானை சந்­தித்­துள்ளார்.

இந்தச் சந்­திப்பின் போது கடந்­த­கால, நிகழ்­கால மற்றும் எதிர்­கால தமிழர் அர­சியல் நடப்­புக்கள் குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும் சில பொது­வான நண்­பர்கள் சந்­தி­ர­காந்­தனை சந்­திக்­கும்­படி வலி­யு­றுத்­தி­ய­மை­யினால் இச் சந்­திப்பை மேற்­கொண்­ட­தா­கவும் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்துள்ளாா்.

 இந்தச் சந்­திப்பின் போது கருத்துத் தெரி­வித்த பிள்­ளையான், தேசிய அர­சி­யலை விடவும் பிராந்­திய அர­சி­ய­லி­லேயே தான் அக்­கறை கொண்­டுள்­ள­தா­கவும் எதிர்­கா­லத்தில் இணைந்து செயற்­படும் சாத்­தி­யங்கள் குறித்து ஆராய முடியும் என்றும் அமைச்­ச­ரிடம் தெரி­வித்­துள்­ள­தாக தெரி­கின்­றது.

இத­னை­விட ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பிலும் இரு­வ­ருக்கும் இடையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவும் இந்த விட­யத்தில் உரிய தீர்­மா­னங்­களை இன்­னமும் தனது கட்சி எடுக்­க­வில்லை என்றும் உரிய நேரத்தில் அந்த விட­யங்கள் குறித்து ஆரா­யலாம் என்றும் பிள்­ளையான் கூறி­யுள்­ள­தா­கத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

தான் சிறைக்குள் இருந்­தாலும் தமது கட்சியின் உறுப்பினர்கள் வெ ளியில் செயற்பட்டு வருகின்றனர். எனவே அவர்களும் உங்களுடன் பேச விரும்புகி றார்கள் என்றும் அவர் அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.