Breaking News

பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலி ; 30 க்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் பகுதியிலுள்ள வைத்தியசாலை யொன்றின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக் குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத் தாக்குதல் காரணமாக 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள தாகவும் அவர்களில் மூவரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ள தனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடுமென அச்சம் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மீட்புக் குழுக்கள் தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை எனவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.