Breaking News

33 கிலோ கஞ்சாவுடன் யாழில் இளைஞன் ஒருவன் கைது!

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் இன்று யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்டவருடன் பழைய கட்டடம் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33.450 கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்தவரிடம் மேலதிக விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.