Breaking News

பாராளுமன்ற வேட்பாளரிற்கு மரணத் தண்டனை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல்நீதிமன்றத்தினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.                                                                                 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்திருந்தது.

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான நிலந்த ஜயகொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு இவ்வாறு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.