Breaking News

வாக்களிப்பு நிறைவு - மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 70% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய அனைத்து மாவட்டங்களிலும் பாரியளவிலான வன்முறை சம்பவங்களின்றி அமைதியான முறையில் வாக்கு பதிவு நடவடிக்கைள் நிறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் 5 மணியுடன் நிறைவடைந்த வாக்கு பதிவுகளுக்கு அமைய..

கொழும்பு 68%
கம்பஹா
களுத்துறை - 65 %
திகாமடுல்லை - 73%
கண்டி  -  72%
அம்பாந்தோட்டை - 76%
மொணராகலை - 73%
கேகாலை - 70%
குருநாகல் - 65%
இரத்தினபுரி 72%
மாத்தளை - 72%
பதுளை - 65%
மட்டக்களப்பு - 76%
புத்தளம் - 65%
காலி   - 70%
மாத்தறை  - 70%
நுவரெலியா - 75%
வன்னி - 74%
திருகோணமலை - 74%
யாழ்ப்பாணம் - 67%
அநுராதபுரம் - 70%