Breaking News

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த சில நிறுவனங்களுக்கான தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 
1.ஆசிரியர் சேவைகளுக்கான தரம் 3 அதிகாரிகளுக்கான செயற்திறன் தேர்வு, 
2.கிராம அதிகாரி சேவையின் தரம் 3 அதிகாரிகளுக்கான எழுத்துத் தேர்வு 
3.இலங்கை தொழிநுட்ப சேவையின் மோட்டர் வாகன பரிசோதகர்களுக்கான இரண்டாவது திணைக்களப் பரீட்சை 
4. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரம் 111 ச் சேர்ந்த சுங்க அதிகாரிகளின் முதலாவது தடைதாண்டல் பரீட்சை 
5. 2020 ஆம் ஆண்டுக்கான பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான (முழுநேரம்) அனுமதிப் பரீட்சை 
6. மக்கள் வங்கிக்கு நிரந்தர சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான பரீட்சை 
7. இலங்கை தபால் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொடர்பான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை.
உள்ளிட்ட பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.